undefined
undefined

துளியாய் சேர்ந்த
கடலில் பிறந்த
மழைத்துளி நான்.
இன்று
மேகமாய் அலைகின்றேன்
வானத்தின் வெளிகளில்
மண்ணில் வீழ்வதே
என் இலட்சியம்
மலரே
உன்னைக் காண முன்பு!
இன்று
உன்னில் விழவே
ஏங்குகின்றேன்.
மலரே
உன்னைக் கண்ட பின்பு
பூவே
என்னை
ஏந்திக் கொள்வாயா?
புன்னகை பூத்திருக்கும்
உன் இதழ்களில்…
|