தங்கம் தடவிய அங்கமடி
உயிர் தளும்பி வழியும் கவிதையடி
உன் அங்கம் அழகிய சிற்பமடி
என் தூக்கம் எங்கும்
உன் சொப்பணமே

இரவை பகலாய் தந்தவளே
என் இதயம் சலவை செய்தவளே
என் உள்ளம் என்னும் பள்ளத்தில்
நான் ஊற்றிக்கொண்ட உயர் மதுவே

தேடல் என்பதை தொடங்க முன்பே
ஓடி வந்து நுழைந்தவளே
கோடி மின்னல் பார்வைகளால்
பல சேதி சொன்ன பெண்மகளே

வட்டம் போட்ட கோட்டுக்குள்
இனியும் வாழ்ந்து தேய்ந்திட
முடியாது.

சுற்றம்
என்ன சொன்னாலும்
என் கால்கள் நடக்கும்
உன்னை நோக்கி

ஊரே கூடி எதிர்த்தாலும்
உன்னை சேரும் என் கரங்கள்

காலன் எதிரே வந்தாலும்
என் பயணம் தொடரும்
உன் திசையில்

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net