undefined
undefined
undefined
சோலைத் தென்றலாய்
வீசிப் போகின்றாய்
சுகந்தம் தருவதாய்
சுற்றி வருகின்றாய்
காலைப் பனியாய்
சில்லிட வைக்கின்றாய்
தூறல் மழையாய்
என்னை நனைக்கின்றாய்
மாலை நிலவாய்
மனதை நிறைக்கின்றாய்
மழலை மொழியாய்
தமிழை நனைக்கின்றாய்
மனதுக்கு நிறைவாய்
மணமேடை வருகின்றாய்
மாங்கல்யம் நான் சூட
மனையாள் ஆகின்றாய்
கணவா என்றெனைக்
கட்டி அணைக்கின்றாய்
சேலைக் குழந்தையாய்
என்மடி தவழ்கின்றாய்
என் பாலை நிலத்தில்
பயிர் வளர்க்கின்றாய்
காலை விடியுமுன்
கண் விழிக்கின்றாய்
என் வீட்டு முற்றத்தில்
கோலம் போடுகின்றாய்
விடிகாலை விடிந்ததும்
தேனீர் தருகின்றாய்
நான் கண்விழிக்கையில்
எங்கு செல்கின்றாய்?
வீசிப் போகின்றாய்
சுகந்தம் தருவதாய்
சுற்றி வருகின்றாய்
காலைப் பனியாய்
சில்லிட வைக்கின்றாய்
தூறல் மழையாய்
என்னை நனைக்கின்றாய்
மாலை நிலவாய்
மனதை நிறைக்கின்றாய்
மழலை மொழியாய்
தமிழை நனைக்கின்றாய்
மனதுக்கு நிறைவாய்
மணமேடை வருகின்றாய்
மாங்கல்யம் நான் சூட
மனையாள் ஆகின்றாய்
கணவா என்றெனைக்
கட்டி அணைக்கின்றாய்
சேலைக் குழந்தையாய்
என்மடி தவழ்கின்றாய்
என் பாலை நிலத்தில்
பயிர் வளர்க்கின்றாய்
காலை விடியுமுன்
கண் விழிக்கின்றாய்
என் வீட்டு முற்றத்தில்
கோலம் போடுகின்றாய்
விடிகாலை விடிந்ததும்
தேனீர் தருகின்றாய்
நான் கண்விழிக்கையில்
எங்கு செல்கின்றாய்?
தங்களின் இந்த கவிதையை நெல்லை தமிழில் மறுபிரசுரம் செய்துள்ளோம். நன்றி.
வலை முகவரி
http://nellaitamil.com