undefined
undefined


உன் புன்னகை என்பது
என் பள்ளிப்பாடம் போன்றது.
இன்னும் படித்து முடிக்கவே இல்லை.

எத்தனை பக்கங்கள்
என்பது கூட
எனக்குத் தெரியாது.

பார்த்து எழுதித்தான்
பரீட்சையில் வென்றேன்.

இப்போதும்
பார்த்துத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
எழுதி வைத்த பக்கங்களுடன்
இன்னும் ஒன்றை சேர்த்துவிட..

தலை நரைத்த போதும்
முதுமை அழைத்த போதும்
இளமை இன்னும் இனிக்கிறதே!

உன் புன்னகை
இன்றும் இனிக்கிறதே!
அன்று போல்..

புரியாமல் விழிக்கின்றேன்
அதே பள்ளிப் பையனாய்

புரிந்ததை மட்டும் எழுதியே
கவிஞனாகி விட்டேன்.

இறக்க முன்னர்
முழுமையும் எழுதி முடித்தால்?
தமிழுக்கு இன்னுமொரு
காவியம் கொடுக்க முடியும்
என்னால்

என்ற நம்பிக்கையில்
தொடர்ந்து எழுதுகின்றேன்
உன் புன்னகையின் பக்கங்களை

இந்தக் காவியம்
இறக்கமுன் முடியுமா?
இல்லை
இறப்பிலே முடியுமா?

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net