அன்பே! ஆருயிரே!
நீ இப்போ எங்கே?
என்னுயிரே!

நானொரு குழந்தை
நீயொரு குழந்தை

நாமொரு குடும்பம்
நமக்கொரு உலகம்

வாழ்வொரு பூந்தோட்டம்
தினம் தினம் கொண்டாட்டம்

நம் உறவுக்குப் பெயரில்லை
உள் அன்புக்கும் குறைவில்லை
என்பதாய் கடந்தன.
அன்றைய நாட்கள்..

எங்களுக்கு இறக்கை முளைக்க முன்பே
காலம் இறக்கை கட்டிப் பறந்தது.

மேகம் சிந்தும் துளிகளில் ஒன்றாய்
நானும்
இன்னொன்றாய்
நீயும்
எங்கெங்கோ சிதறிவிட்டோம்.

பருவங்கள் மாற
துருவங்கள் உருக
பகல்களும் இரவுகளும்
கடந்தோடிப் போக
இன்று
நீ ஒரு குமரி
நான் ஒரு குமரன்

உன் சின்ன வயதில்
நீ தந்த முத்தங்கள்
இன்று ஏனோ இனிக்கின்றன.

உன் சின்ன விழிப்பார்வை
இன்றும் மின்னல் வெட்டுகின்றது

நீ கெஞ்சும் மொழி கேட்க
என் நெஞ்சு ஏனோ துடிக்கின்றது

உன் வெட்கப் பூட்டும்
விளையாட்டு கோபமும்
வேண்டி நிற்கின்றேன்.

பெண் நால்வகைக் குணத்தை
உன் உருவில் காணத்துடிக்கின்றேன்.

உன் பிஞ்சு மன அன்பு
இன்னும் இருந்து என்னை ஏதோ செய்ய

உன்னில் ஏதோ எனக்குத் தோன்றி
உள்ளிருந்தபடி என்னைக் கொல்ல..

சகானாவின் உயரங்களில்
சகாராவின் வெளிகளில்

பனிக் காடுகளில்
பசுமைத் தேசங்களில்

என
என் தேடலும் தொடர்கிறது

தேசங்களும்
எல்லைகள் கடந்து
நீண்டு செல்கின்றன
நம் அன்பைப் போல்

அன்பே! ஆருயிரே!
நீ இப்போ எங்கே?
என்னுயிரே!

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net