ஒருவன்....
இருளுக்கு நடுவில்
எப்படி உன்னால்
சிரிக்க முடிகிறது?

இன்னொருவன்....
உன் வாழ்வின்
ஒவ்வொரு சொட்டும்
வசீகரம் மிக்கது.

மற்றொருவன்....
இன்றும் போல
என்றும் இருந்தால்
எப்படி இருக்கும்?

நான்....
ஆற்று வெள்ளம்
அள்ளிப்போகும் கிளிஞ்சல்
வாழ்வு.

வாழ்வின் கோப்பையை
நிறைப்பது இரவு.

இரவின் கோப்பையை
நிறைப்பது நிலவு.

ஆனால்
அதிகாலை வேளைகளில்
நீ புற்களில் அழுதுவிட்டுப்போவதை
நான் மட்டுமே
அறிகின்றேன்.

என்னிரு விழிகள் போதவில்லை
உன்னுடன் சேர்ந்து அழுவதற்கு

நான் கவிஞன் என்பதால்
என்னிடம்
வர்ணம் பூசாத வார்த்தைகள் கூட இல்லை.
நீ ஏன் அழுகின்றாய் என்பதை
இந்த உலகிற்கு
சொல்லிப்போவதற்கு.

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net