undefined
undefined




பெண்ணவளே!
பேரழகே!
நான் தேடிய பூங்கொடியே!
கண்மணியே!
காரிகையே!
என் காதலியே!

தேவதையே!
தேன் நிலவே!
ஆடை கட்டும் பைங்கிளியே!

முழுமதியே!
முதல் மழையே!

வர்ணனைகள் எண்ணில் இல்லை.
வார்த்தைக்குள் நீ அடங்கவில்லை.

பார்வைகள் நிறையுதடி உன்னில்.
வாலிபம் தேடுதடி உன்னை.

தொலையுதடி! தொலையுதடி!
என் ஆயுள் உன்னில் தொலையுதடி.

அலையுதடி! அலையுதடி!
என் ஆவி உன் பின் அலையுதடி!

தோகை இளம் மயில் அழகே!
துள்ளும் கலை மானினமே!

போதுமடி! போதுமடி!
போதை தரும் உன் அழகு.

வாடுதடி! வாடுதடி!
வஞ்சம் இல்லா வாலிபம்.

தேடுதடி! தேடுதடி!
மஞ்சம் உந்தன் நெஞ்சமடி.

தூரமில்லை! தூரமில்லை!
வானமொரு தூரமில்லை.

நனையவில்லை! நனையவில்லை!
மழையிலும் நான் நனையவில்லை.

கோடையிலும் குளிருதடி!
வாடையிலும் வேர்க்குதடி!

தூங்கப்போனால் தூக்கமில்லை!
தூங்கிவிட்டால் கனவு தொல்லை!

என்னவளே! என்னவளே!
ஏக்கம் தந்த பெண் உருவே.

வந்து விடு! வந்து விடு!
தொல்லை தர என்னருகில் வந்து விடு.

இல்லை கொன்றுவிடு! கொன்றுவிடு!
குற்றுயிர் பிரித்தென்னைக் கொன்றுவிடு.






0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net