விரைவு ரயிலே
விபத்து நிகழ்ந்ததடி
உன்னோடு

அழகுப் புயலே
என்னை
அடித்துப் போனாயடி
உன்னோடு

இளைய கொடியே
என்னை
வளைத்துப் போட்டாயடி
உன்னிடையில்

நான்
நெருப்பு மனிதன் என
நினைத்திருந்தேன்

ஒரு சிவப்பு ரோஜா தந்து
அந்த
நினைப்பை சிதைத்துவிட்டாய்
என்
நிலையை மாற்றிவிட்டாய்

மாற்றங்கள் கண்டேனடி
உன் வரவில்
என்னை மாற்றிக் கொண்டேனடி
உன் செயலில்
நானாக மாட்டிக் கொண்டேனடி
உன் நினைவில்

வெள்ளை ரோஜாவே
என் உள்ளம் உனக்காக
உயிரும் அதற்காக.....

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net