நானும் அவனும்
சஞ்சரிக்கும் பொழுதுகளே
கால நீட்சியாய்
தொடர்கிறது.
பிரம்மனே காணமுடியாத
அடி நான்
முடி அவன்
ஈர்ப்பு என்பதை
அறிமுகம் செய்தது
நாங்கள் தான்
நானும் அவனும்
சஞ்சரிக்கும் பொழுதுகள்
மணித்துளிகளாய் தொடங்கி
மணிக்கணக்காய் மாறி
யுகங்களாய் தொடர்கிறது.
ஒரு மாலைப் பொழுது..
அவனைப்பார்த்தபடி நானும்
என்னைப் பார்த்தபடி அவனும்
பொழுது இரவை அழைக்க
காற்று குளிரை நிறைக்க
மரங்கள் இலைகளை உதிர்க்க
அவன் என்னை
நெருங்கி வருவதாய்
உணர்ந்தேன்
நெற்றி வியர்த்திட
சத்தமிட்டுப் பல
முத்தங்கள் பொழிந்தான்
என் நிலவு காய்ந்த முற்றத்தில்.
குளிர்ந்து போய்
நானும் ஒரு
குட்டி நிலவாய் ஆனேன்.
சஞ்சரிக்கும் பொழுதுகளே
கால நீட்சியாய்
தொடர்கிறது.
பிரம்மனே காணமுடியாத
அடி நான்
முடி அவன்
ஈர்ப்பு என்பதை
அறிமுகம் செய்தது
நாங்கள் தான்
நானும் அவனும்
சஞ்சரிக்கும் பொழுதுகள்
மணித்துளிகளாய் தொடங்கி
மணிக்கணக்காய் மாறி
யுகங்களாய் தொடர்கிறது.
ஒரு மாலைப் பொழுது..
அவனைப்பார்த்தபடி நானும்
என்னைப் பார்த்தபடி அவனும்
பொழுது இரவை அழைக்க
காற்று குளிரை நிறைக்க
மரங்கள் இலைகளை உதிர்க்க
அவன் என்னை
நெருங்கி வருவதாய்
உணர்ந்தேன்
நெற்றி வியர்த்திட
சத்தமிட்டுப் பல
முத்தங்கள் பொழிந்தான்
என் நிலவு காய்ந்த முற்றத்தில்.
குளிர்ந்து போய்
நானும் ஒரு
குட்டி நிலவாய் ஆனேன்.