விடுதலை வேண்டி
உழைக்கும் மக்களே!
இப்போது இழக்க ஏதும் இன்றி நாம்
காக்க யாரும் இன்றி நாம்.

தினம் தினம்
நெஞ்சைப் பிழந்து சாய்க்கிறது.
பெரும் துயர்.
இன்னமும் ஓயவில்லை
அழுகுரல்கள்.

துயரில் மூழ்கித் தவிக்கும்
தமிழினமே!
அழு!

அழும் வரை அழு
உன் கவலை தீர்க்க
கடல் கொண்டு வடித்தாலும் போதாது.
இருப்பினும் அழு
கண்ணீர் வற்றும் வரை அழு
சொட்டுக் கவலையாவது விட்டுப்போகட்டும்
கண்ணீரோடு

அழுது முடித்தவுடன் எழு
ஆயிரம் துயர் வரினும்
எழுந்து நிற்போம் என எழு

இனிவரும் காலங்கள் எங்களுக்கென
எழுதிவை

மீண்டும் மறுநாள்
உன்னைத் தேடித் துயர் வரின்
துணிந்து எதிர்கொள்
அப்போதும்
தேவையெனில் அழு
சொட்டுக்கவலையாவது
விட்டுப் போகட்டும்

ஆனால்
இன்று போல் எழு
முடிவெடு
முரசறை
போராடு

இது விதியல்ல
இது தான் எம் வாழ்வு
வரலாறு.

1 Your Comments:

  1. Esha Tips says:

    மிகவும் ஆழமான கருத்து

    பாராட்டுகள்

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net