பூவையென் முகத்தில்
காலத்தின் கீறல்கள்
வலியைத்தந்தன.

ஏனெனில்..
வாழ்வொரு
போராட்டம்.
அதில் தினம்
பல போர்க்களம்.

புலர்கின்ற பொழுதொன்றில்..
காலமே வந்து
புதிதொன்றைத்
தந்திட..,

என்னுள்
ஏனோ?
புயலடிக்கின்றது.
எண்ணத்தில் எல்லாம்
மின்குமிழ் சிரிக்கின்றது.
ஆன திசை முழுதும்
மணி அடிக்கின்றது.

இது எனக்குப் புதிது!
அய்யகோ!
என் செய்வேன் நான்?
இது இன்னொரு போர்க்களமா?
இங்கும் காண்பது போர்முனையா?

இதயம் திறந்து
இழையோடிய வார்த்தைகளை..
என் உள்ளம் குழைத்து
உயிரூட்டிய காகிதத்தை..
மின்னஞ்சல் செய்யாமல்
உன்னிடம் தருகின்றேன்.

வெள்ளைப்புறாவே!
இங்கே வா!

சில மனிதர் செய்வது போல்
இது
அரட்டைக்காதல் அல்ல.
இது
இதயம் கொடுத்து
இதயம் வாங்கும்
உண்மைக்காதல்.

காற்று வெளி நுழைந்து
வானவெளி கடந்து
காத தூரம் சென்று
எனக்கொரு அஞ்சல் செய்!
என் வாழ்வெனும்
பயணம் தொடர
அல்லது
வாழ்வுடன் போர் புரிய.

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net