உந்தன் பேரழகு பார்த்த
பேதை மனம் பேசுது கேளடி..

கண்கள் உந்தன் கண்கள்
அது காந்தம் கலந்த அங்கமடி

எந்தன் இரும்பு நெஞ்சை இழுக்குதடி
நெருங்க மறுக்க வலிக்குதடி

மௌனம் உந்தன் மௌனம்
அது ஆயிரம் வார்த்தைகள் பேசுதடி

அத்தனையும் கவிதையாய் கொட்டுதடி
அதில் பொய்யே எனக்கு பிடித்ததடி

பேச்சு உந்தன் பேச்சு
சொற்கள் கேட்க சொக்குதடி

குயில்கள் கேட்டால் பாவமடி
உனைப்போல் பாட துடிக்குமடி
உந்தன் குரலில் பாடம் கற்குமடி

கூந்தல் உந்தன் கூந்தல்
அது இருளை வென்ற கருமையடி

என் இளமை ஒளியை தேடுதடி
என் இதயம் அதில்தான் தொலைந்ததடி

சிரிப்பு உந்தன் சிரிப்பு
இது ஒன்றே எனக்கு போதுமடி

என் பூமி சுற்ற மறுக்குதடி
பல பூகம்ப மாற்றங்கள் நிகழ்த்துதடி

அழகு உந்தன் அழகு
இந்த கவிஞனிடத்தில் வார்த்தையில்லை
அதை கவியாய் சொல்லிப்போவதற்கு

எந்தன் தமிழே எனக்கு போதவில்லை
உன்னை முழுதாய் சொல்லி முடிப்பதற்கு

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net