தமிழா!
காலமிது காலமிது
காத்திருந்த காலமிது.

வேளையிது வேளையிது
பொங்கு தமிழ் வேளையிது.

ஒன்றுபடு ஒன்றுபடு
ஓரணியில் ஒன்றுபடு.

கையிலெடு கையிலெடு
உன் கடனை கையிலெடு.

செய்து முடி செய்து முடி
செவ்வனே செய்து முடி.

வேரோடு விழுதுகள் சேர்கையிலே
வீறோடு நிமிரும் பெரு விருட்சம்.

நாடெல்லாம் நாம் நிமிர்ந்து எழுகையிலே
எங்கள் ஊரெல்லாம் விடிவது உறுதிபடும்.

பாரோடே போராடும் போர் நமது
இதை பகுத்தறிந்து நடத்தலே
முதல் கடன் உனது.

யாருமே கொடுக்காத அடி நமது
அதை கொடுத்திட சேர்த்திடும்
வளம் பெரிது.

இதை உணர்ந்து நீ நடப்பாய்
தமிழா!
உன் மனம் பெரிது.

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net