நேற்று
என்றொரு பொழுது
இன்று போலுள்ளது
என் நினைவில்

நீல வானம்
ரொம்ப தொலைவில்
காற்றுக்கூட
அன்று ஓய்வு
நிசப்தம் எங்கும்
நிரம்பி வழிய
நீள நடந்தேன்
என் வழியில்

பட்டுடுத்தி ஒரு
பட்டாம் பூச்சி
சிறகடித்தென் முன்
பறந்து போக

புயலடித்துப் போனதென்
மனதுக்குள்
நான் சிறகடித்துப் பறந்தேன்
அந்த
வானின் உயரத்தில்

இதயம் மட்டும்
சிறைப்பட்டது
அந்த சிறகுக்குள்

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net