என்றோ?
ஆரம்பித்து விட்டேன்.
என் பயணத்தை..

பல தேசங்களின்
எல்லைகள் தாண்டி
எங்கோ?
சென்று கொண்டிருக்கின்றேன்.

எப்போது போவாய்?
என்று
ஏசுவோரை கடந்து..

எப்போது வருவாய்?
என்று
ஏங்குவோரின் வாசலில்
இப்போது நான்.

என் கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
ஒரு கூட்டம் தெரிகின்றது.

அதோ!
அதில்
ஒருத்தி

உறவையெல்லாம்
பிரிந்து வந்து
உள்ளத்தில்
கனவுகள் சுமந்தபடி
வெற்றுக் குடத்தோடு
வெயில் கொல்லும்
காலப் பெரு வெளியில்
கால் கடுக்க
காத்து நிற்கின்றாள்.
என் வருகைக்காக..

இதோ!
அவளின்
காலடித் திடலில்
இப்போது நான்..

நன்று
உண்டு
உடுத்து
உறங்கி
நாளாச்சு என்பது
நன்றாய் தெரிகின்றது.

என்னால்
என்ன செய்ய முடியும்?
இப்போது அவளுக்காக..

என்
உதிரமோ
வியர்வையோ கொடுக்து
அவள் தாகமாவது தீர்க்க
ஏங்குகின்றேன்.

ஆனாலும்..

ஒரு கணம் நின்று
சில வார்த்தை பேசி
என்னிடம் உள்ளதை
அவள் குடம் கொள்ள
என்னால்
அள்ளிக் கொடுக்க முடியாமல்
எங்கோ ஓடிக்கொண்டிருக்கின்றேன்
சரிவை நோக்கி..

அவளோ
ஏக்கத்துடன்
என்னைப்பார்த்தபடி
சற்று தள்ளியே நிற்கின்றாள்
தன் கால்களைக்கூட
நான் தொட்டு
வருந்தியழுது விட்டுப்போக
முடியாத தூரத்திரல்.....

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net