கோடி உயிர்களில்
ஊறி வழியும்
காதல் ஒன்று
காட்சியில் நுழைகின்றது.

தேடித் தேடி
தொலைந்து போகும்
தேடலாகி
புதுக் காவியம் வரைகின்றது.

யுகங்கள் மாறி
உலகம் சுருங்கி
உள்ளங் கையில் சுழன்றாலும்

இதயம் நுழைந்த
உறவின்
வருகை நினைந்து
நகரும் நாட்கள்
யுகம் போல் தெரிகின்றது.

கால வெளியில்
நடையாய் நடந்து
கால்கள் வலிக்கிறது.
நாட்கள் மட்டும்
நகர மறுக்கிறது.

என் உறவைச் சுமக்கும்
இரும்புப் பறவை
இத் தேசம் வரும்நாள்
இன்றாய் மாறாதா?

அத் திருநாள் காண
கழியும் பொழுதெல்லாம்
நானே சேமிக்க..

காத்திருப்பு என்னவோ
இன்னும் கனதியாய்
இன்னும் இன்னும் நீளமாய்…

காத்திருத்தல் என்பது

ஒரு கடற்கரையிலோ
குளக்கரையிலோ
அல்லாமல்
விமான நிலையத்தில் என்பதால்

இதயம் இன்னும்
விரைவாய் அடிக்கிறது.
அந்த வானின் உயரம்
சென்று பார்க்க
துடியாய்த் துடிக்கிறது

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net