எங்கோ பார்த்தேன்
அங்கே தொலைந்தேன்
என்பேனே
அது இவளைத்தான்

என்றோ பார்த்தேன்
அன்றே தொடர்ந்தேன்
என்பேனே
அது இவள் காலடித்தடம் தான்

நான் மெல்லிசை ரசித்த
முதல் பொழுதொன்று
சொல்வேனே
அது பிறந்தது
இவள் கொலுசில் இருந்துதான்

நான் தினம் தினம் இசைத்திடும்
பல்லவி இருக்கிறதே
அது பிறந்தது
இவள் மொனத்தில் இருந்துதான்

சூரிய தேவன் ஏவிய கதிராய்
எனைச் சுட்டெரித்த
கதை சொல்வேனே
அது
இந்தக் கண்கள் தான்

வண்டுக்கு மலர்ந்த
வாசமலரையெல்லாம்
சூடிக்கொள்ளும் வசியக்காரி
என்பேனே
அவள் இவள்தான்

உன் புன்னகை என்பது
என்ன விலை என
எனைப் பிறர் கேட்பதெல்லாம்
இவள் எனைப் பார்த்துச் சிரித்த பிறகுதான்

அப்பாவிய் நான் அன்று
அழுது புரண்ட கதை ஒன்று சொல்வேனே
அப்போது
எனை அடித்துச் சென்றவள் இவள் தான்

காவலர்களே!
இவளைப்
பிடித்துச் சிறையில் அடையுங்கள்

நானிருக்கும் பைத்தியக்காரச்
சிறையிலல்ல

வெளியில்
எங்கும் எரிகிறதே
தீ
அதை மூட்டிவிட்டு
உள்ளிருக்கும்
காதல்த்
தீவிர வாதிகளுடன்.

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net