undefined
undefined
undefined
மலரே!
தென்றல் தேடிய
முகவரி நீ.
முகவரி மாறிய
தென்றலின்
முதல் வரியும் நீ.
தென்றல் தீண்டிட
நீ மலர்ந்தாய்.
தென்றல் உன்னைத்
தொட்ட போது
நீ நிலை தடுமாறினாய்.
தென்றல் சுமந்த நீரால்
நீ நனைந்தாய்.
தென்றல் உன்னை
அணைத்தபோது
நீ ஏனோ
தலை குனிந்தாய்.
மழை கழுவிய
மலரே
உன் வாசம் போனதாய்
வருந்தாதே
வாழ்வு முடிந்ததாய்
புலம்பாதே
மலர் தழுவிய என்னில்
சுவாசமாய்
உன் வாசம்
இன்று நான் மண்னோடு
உன் வாசம் மீண்டும் காற்றோடு
நாளை நீ என்னோடு
உன் வாசம் அதே காற்றோடு
கலங்காதே!
உனக்கும் எனக்கும் மட்டுமல்ல
உலகிற்கே இதுதான் நியதி.
தென்றல் தேடிய
முகவரி நீ.
முகவரி மாறிய
தென்றலின்
முதல் வரியும் நீ.
தென்றல் தீண்டிட
நீ மலர்ந்தாய்.
தென்றல் உன்னைத்
தொட்ட போது
நீ நிலை தடுமாறினாய்.
தென்றல் சுமந்த நீரால்
நீ நனைந்தாய்.
தென்றல் உன்னை
அணைத்தபோது
நீ ஏனோ
தலை குனிந்தாய்.
மழை கழுவிய
மலரே
உன் வாசம் போனதாய்
வருந்தாதே
வாழ்வு முடிந்ததாய்
புலம்பாதே
மலர் தழுவிய என்னில்
சுவாசமாய்
உன் வாசம்
இன்று நான் மண்னோடு
உன் வாசம் மீண்டும் காற்றோடு
நாளை நீ என்னோடு
உன் வாசம் அதே காற்றோடு
கலங்காதே!
உனக்கும் எனக்கும் மட்டுமல்ல
உலகிற்கே இதுதான் நியதி.