இருளை விரட்டிய சந்தோசத்தில்
உற்சாகமாய் இருந்தது
ஒரு காலைப்பொழுது

முல்லை நிலம் முற்றுகையிட
படையெடுத்துக் கொண்டிருந்தன
முகில்க்கூட்டங்கள்;

வட்டமடித்து வட்டமடித்து
புது மெட்டிசைத்துக்கொண்டிருந்தன
வானம் பாடிகள்

உதிர்வின் சலசலப்பிற்கே இடமில்லாமல்
கலகலப்பாய் காட்சியளித்தன
மலர்கள்

அமைதியாய் என்னை
வருடிக்கொண்டிருந்தது
இதமான காலை இளங்காற்று

என் இளமைக்கும்
இந்த இயற்கைக்கும்
ஏதோ இணைப்பு இருப்பதாய்
சிந்தித்துக் கொண்டிருந்தேன்

காலை வணக்கம்
காதில் ஒலித்தது

இந்தக் காளைக்கு
இதமான காலைப்பொழுதில்
செந்தமிழ் தேன்மொழியால்
காலை வணக்கம் சொன்ன
செந்தமிழ் தேன்மொழியாள்
யாராய் இருக்கும்

ஆவல் மேலிட
கண்களை திறந்து பார்த்தேன்

என்ன அதிசயம்
மின்னல் வெட்டி
மழை பொழிவதாய்
இன்னுமோர் இயற்கையை
கண் எதிரே கண்டேன்

இப்போது
மீண்டும் சிந்தித்தேன்

இந்த இயற்கைக்கும்
எனக்கும்
என்ன இணைப்பு என்று

அப்பொழுது
இதயம் பேசியது
உனக்காக பிறந்தவள்
என்று.

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net