ஓயாத அலையாக உழைத்தவனே!
பார் புகழும் சாதனைகள் படைத்தவனே!

வாழ்வை வரலாறாய் தந்தவனே!
வல்லமை எதுவென்று சொன்னவனே!

போரை வாழ்வாய் கொண்டவனே!
புலிவீரம் புதிதென்று சொன்னவனே!

பகை நடுங்க களம் செய்த புலிமகனே!
ஏன் இன்று தூங்குகின்றாய் எழு மகனே!

புயலாகி பகைவீடு செல்பவனே!
பகை புரியாத புதிராக வெல்பவனே!

பகைவருக்கு தலை வலியாய் வாழ்ந்தவனே!
தலைவருக்கு பலம் சேர்த்த தளபதியே!

தமிழருக்கு பயன் தரு வாய் நிமிர்ந்தவனே!
தரணியெங்கும் தமிழர் பலம் சொன்னவனே!

விடை பெறுவாய் என்று நாம் நினைக்கவில்லை!
வீர வேங்கை என்றும் மண்ணில் சாவதில்லை!

நெருப்பாய் பகையை எரித்தவனே!
என்றும் இருப்பாய் எம் நெஞ்சங்களில்!

வெடிகுண்டு தோற்றதையா உன்னை மண்ணில் வீழ்த்த!
விதி மீண்டும் வென்றதையா உன்னைச் சாவு கொல்ல!

ஊர் மீட்கும் கனவோடே
உன் நாட்கள் நகர,

உனை இழக்கும் நாள் ஒன்று
ஏன் எமக்கு புலர்ந்ததையா?

களமுனைகள் தேடுதையா உந்தனது கால்தடம்!
காற்றலைகள் தேடுதையா உந்தனது கட்டளை!

தோழமைகள் ஏங்குதையா உந்தன் முகம் காண!
காவலரண் காயுதையா உன்னை தினம் காண!


நீர் நிறைத்த நினைவுகளோ!
நெஞ்சில் வலி மூட்டுதையா!

நீர் சுமந்த கனவதுவோ!
நிமிர்ந்து நட என்குதையா!

உன் கனவை சுமந்தபடி!
பணி தொடர்வோம் உறுதி!

விடை பெறும் வீரனே!
வீர வணக்கங்கள் உந்தனுக்கு!

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net