தாயே! என்று நான் வருவேன்?
உன் மடி தவழ..
அன்று கழிந்து தான் இறப்பேன்.
உன் மடியில் புதைய..
என்று தான் வருவேனோ?

உன் முலையில் பால் பருக..
அன்று தான் தொலையும்
என் துக்கம்.

அதன் பின்பு தான் தழுவும்
எனை தூக்கம்.

தாயே! தூக்கம் தொலைத்து
ரொம்ப நாளாச்சு.
ஏக்கம் நிறைந்து நெஞ்சு
பாழாய் போச்சு.

தாயே!
ஊர்விட்டு ஊர் பிரிகையிலேயே
உயிர் பாதி போச்சு.

உனை விட்டு இங்கு வாழ்கையில்?
அந்த மீதிக்கும்
என்னவோ ஆச்சு.

நீ நலமாய் இருக்கையிலே
உள்ளம் கொஞ்சம் ஆறிச்சு.

இப்போ

உந்தன் துயர் கேட்கையிலே
கொடும் வெம்மையிலே வேகிற்று.

என்ன பாவம் நாம் செய்தோம்?
உன்னைப் பிரிந்து தவிக்க..

என்ன பிழை நீ செய்தாய்?
எம்மைத் தொலைத்துத் துடிக்க..

என்னைப் போல பல பேர்க்கு
உன்னைச் சேரத் துடிப்பு.

எந்தத்துயர் தொடர்ந்தாலும் நிற்காது
நம் பயணத் துடுப்பு.

ஊர் போகும் கனவோடே
என் நாட்கள் நகரும்.

உனை மீட்கும் போரில்
என் பங்கும் நிச்சயம் இருக்கும்.

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net