எங்கிருந்தோ பிறந்து
வான் மீது வலம் வந்து
காற்றோடி போராடி
கார் முகிலாய் கவிந்து

குளிர்ந்து
உருகி
குட்டித் துளிகளாய்
புறப்பட்டு..

என்னை நனைத்தது.
நான் ரசித்த
பூவை நனைத்தது.
நிமிர்ந்து நிற்கும்
புல்லை நனைத்தது..

நான் பேசும் தமிழ்
அதில் நனைந்தபோது…

என் பாதச்சுவடுகள் பற்றி
முத்தமிட்டது.
சிதறிப் போயொரு
சத்தம் செய்தது.

அது சங்கீதம் அல்ல!
என் உறவுகளின் அவலம்!

அப்படியானால்?
இது
மழைத்துளி அல்ல.

இந்து சமுத்திரம்
கடந்து வந்த
கண்ணீர்த்துளி.


0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net