சோகம்!
நான் காணும் உலகில்…
கழியும் ஒவ்வொரு வினாடிகளில்…
சோகம் என்பது
நிறைந்து உறைந்திருக்கின்றது.

காண்பவை
காணாதவை
கேட்பவை
கேட்காதவை

அத்தனையிலும்
உயிரோடியிருக்கும்
எப்போதும் உயிருள்ள
உயிர்கொல்லும் பொருளாய்
உருவெடுத்திருக்கின்றது.

நான் சுமப்பவை
பிறர் சுமப்பவை
என நீண்டு செல்கின்றது
முடிவிலி வரை.

அத்தனையும் மொத்தமாய்
என்னைச் சுற்றிக் கொல்(ள்)கின்றது.

எதற்காக அழுவது?
எத்தனை முறை அழுவது?

இந்தச் சொட்டுக் கண்ணீர் போதவில்லை
என் சோகம் சொல்லி அழுது வடிக்க.

கடவுளே!
எனக்கு வரமேதும் தரும் எண்ணம்
உனக்கிருந்தால்?

கடல் அளவு கண்ணீர் கொடு.
அத்தனை சோகத்திற்கும் சேர்த்து
மொத்தமாய் அழுது முடிக்க.

குறைந்த பட்சம்
குளமளவாவது கொடு

வழமையாய் நீ தரும்
குறை வரம் போல

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net