என் முற்றத்து மல்லிகையே!

எப்போது கலைப்பாய்
உன் மௌனம்?

எப்போது உதிர்ப்பாய்
உன் வார்த்தை?

ஒரு முறை தனியே வா
என் அருகில்..

வெண்ணிலவு துணையிருக்க
நான் உன்னிடம் பேசவேண்டும்

யாரிடமும் சொல்லாத ஒன்றை
உனக்குமட்டும் சொல்ல வேண்டும்

சொல்லிவிடு அன்பே!
எப்போது வருவாய்?

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net