undefined
undefined
undefined
ரம்பை ஊர்வசி
சொல்லத்தான் கேட்டேன்.
மேனகை உன்னை
கண்களால் காண்கிறேன்.
இந்திரலோகம் இறங்கி வந்து
இங்குற்றாயா பெண்ணே!
இல்லை
இந்திரலோகம் மிஞ்சிடும் பெண்ணாய்
இங்குதான் பிறந்தாயா
கண்ணே!
எங்கு தான் வாழ்ந்தாய்?
இத்தனை நாளாய்..
ஏங்குதே நெஞ்சம்
நாளொரு பொழுதாய்..
நிலை மீறி ஆடும் கண்கள்
நிஜமாக இல்லை
உன்னை விஞ்ச வேறு பெண்கள்
உன்னைக் கண்கொள்ளக் காணத
கண்ணென்ன கண்ணோ!
நீ நெஞ்சள்ளிப் போகாத
நெஞ்சங்கள் உண்டோ?
உன் கன்னக்குழி அழகில்
காணாமல் போகாதார் உண்டோ?
உன் சின்னச் சிரிப்புச் சிறையில்
சிக்கிச் சிறைப்படாதார் உண்டோ?
இல்லையென்று சொல்கின்ற இடையில்
வேறு பெண்ணே இல்லை!
இனி யாரும் பிறந்தால்
அது நம் பிள்ளை!
வெண்ணிலவின் தங்கை என்று
உன்னை நான் அழைக்கவா?
உன்னைத் தொட்டுத்தொடரும் சொந்தம்
நான் என்று சொல்லி வைக்கவா?
ஐந்தொழில் புரியும்
வல்லமை கொண்டவளே!
உன் அங்கங்கள் கொண்டு
அத்தனையும் விளக்கி
ஆடி முடி!
இங்கு
ஆடிக்கொண்டிருப்பவர்கள்
அத்தனைபேரும் அடங்கும் வரை..
சொல்லத்தான் கேட்டேன்.
மேனகை உன்னை
கண்களால் காண்கிறேன்.
இந்திரலோகம் இறங்கி வந்து
இங்குற்றாயா பெண்ணே!
இல்லை
இந்திரலோகம் மிஞ்சிடும் பெண்ணாய்
இங்குதான் பிறந்தாயா
கண்ணே!
எங்கு தான் வாழ்ந்தாய்?
இத்தனை நாளாய்..
ஏங்குதே நெஞ்சம்
நாளொரு பொழுதாய்..
நிலை மீறி ஆடும் கண்கள்
நிஜமாக இல்லை
உன்னை விஞ்ச வேறு பெண்கள்
உன்னைக் கண்கொள்ளக் காணத
கண்ணென்ன கண்ணோ!
நீ நெஞ்சள்ளிப் போகாத
நெஞ்சங்கள் உண்டோ?
உன் கன்னக்குழி அழகில்
காணாமல் போகாதார் உண்டோ?
உன் சின்னச் சிரிப்புச் சிறையில்
சிக்கிச் சிறைப்படாதார் உண்டோ?
இல்லையென்று சொல்கின்ற இடையில்
வேறு பெண்ணே இல்லை!
இனி யாரும் பிறந்தால்
அது நம் பிள்ளை!
வெண்ணிலவின் தங்கை என்று
உன்னை நான் அழைக்கவா?
உன்னைத் தொட்டுத்தொடரும் சொந்தம்
நான் என்று சொல்லி வைக்கவா?
ஐந்தொழில் புரியும்
வல்லமை கொண்டவளே!
உன் அங்கங்கள் கொண்டு
அத்தனையும் விளக்கி
ஆடி முடி!
இங்கு
ஆடிக்கொண்டிருப்பவர்கள்
அத்தனைபேரும் அடங்கும் வரை..
சந்தோசம்யா !!!