புதுமை புனைந்த
உன் புன்னகைக்கு
என் வாலிபம் விலைபோய்விட
அழகு நிறைந்த
உன் எடையின் நிறையானது
என் இதயம்.
வேல் விழிகள் தாக்கி
என் வயதை வதைத்திட
நீயே வேண்டும்
என நினைந்தது
என் மனம்.
அழகு தேவதை
அசையும் அசைவினில்
வாலிப ஆசைகள்
வந்து நிறைந்திட
நான் என்னையே மறந்தேன்.
என் இளமை
முழுமை பெறுவதாய்
நீ என் கண்களில்
தெரிந்தாய்.
என் உள்
இருந்து கொண்டே
வெளியில் உலவும் பெண்ணே
யாரடி நீ மோகினி?