புதுமை புனைந்த
உன் புன்னகைக்கு
என் வாலிபம் விலைபோய்விட

அழகு நிறைந்த
உன் எடையின் நிறையானது
என் இதயம்.

வேல் விழிகள் தாக்கி
என் வயதை வதைத்திட

நீயே வேண்டும்
என நினைந்தது
என் மனம்.

அழகு தேவதை
அசையும் அசைவினில்
வாலிப ஆசைகள்
வந்து நிறைந்திட
நான் என்னையே மறந்தேன்.

என் இளமை
முழுமை பெறுவதாய்
நீ என் கண்களில்
தெரிந்தாய்.

என் உள்
இருந்து கொண்டே
வெளியில் உலவும் பெண்ணே
யாரடி நீ மோகினி?

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net