undefined
undefined


ஓரப்பார்வை வீசிப்போகும்
இளந்தென்றலே
என்ன சொல்ல வந்தாய்
என்னிடத்தில்

பூமி பார்த்துப்
புன்னகைத்துப் போறவளே
இந்தக் காளையைப் பார்த்து
காதல் சொல்ல வந்தாயா?

பட்டுத்தாவணி
தொட்டுக் கொள்ளும் பாதங்களே
அவளிற்கு ஒருமுறை
அனுமதி கொடுங்கள்
என்னைப் பார்ப்பதற்கு

யாரும் இல்லாத
பொழுது போகுமுன்னே
சொல்லிவிடு பெண்ணே
சொல்லவந்ததை

இல்லையேல்

என்னைத் தொலைத்தபடி நானும்
உன்னைத் தொலைத்தபடி நீயும்
இந்தப் பொழுதை மீண்டும் தேடி
தொலைக்கவேண்டும்
எம் நந்தவன நாட்களை

undefined
undefined


புதுமை புனைந்த
உன் புன்னகைக்கு
என் வாலிபம் விலைபோய்விட

அழகு நிறைந்த
உன் எடையின் நிறையானது
என் இதயம்.

வேல் விழிகள் தாக்கி
என் வயதை வதைத்திட

நீயே வேண்டும்
என நினைந்தது
என் மனம்.

அழகு தேவதை
அசையும் அசைவினில்
வாலிப ஆசைகள்
வந்து நிறைந்திட
நான் என்னையே மறந்தேன்.

என் இளமை
முழுமை பெறுவதாய்
நீ என் கண்களில்
தெரிந்தாய்.

என் உள்
இருந்து கொண்டே
வெளியில் உலவும் பெண்ணே
யாரடி நீ மோகினி?

undefined
undefined


என் எண்ணம் உருவெடுத்து
பெண்ணாய் உலவக் கண்டேன்.
ஓர் சாலையின் ஓரத்தில்..

என்னுள் அவள் வந்து நுழைய
சாய்ந்து போனேன்.
வாழ்வின் பயணத்தில்
அவளின் பக்கமாய்..

இப்போது
அழகிய நைலின்
ஓரத்தில் நடக்கிறேன்.
அவளின் கைகளை கோர்த்தபடி..

இன்னும் சிறிது நேரத்தில்
அல்ப்ஸ் மலைச்
சிகரத்தில் நிற்பேன்.
அவளைச் சுமந்தபடி..

அடுத்து
என்றும் போகாத
இடங்கள் நோக்கி
எங்கள் பயணம் தொடரும்..

அதற்கிடையில்
அலாரம் அடித்து விட்டால்

எழுந்து சென்று
காத்துக்கிடப்பேன்.
அதே சாலையின் ஓரத்தில்
அவளின் வருகைக்காக..

undefined
undefined


புயலடிக்கும் பொழுதோடு
புலர்கிறது விடிகாலை.
அலையடிக்கும் மனதோடு
தொடர்கிறது அன்றாட வாழ்வு.

எந்த நொடியும்
உடைந்து போகும்
நீர்க்குமிழிகளாய்
நான் காணும் மனிதர்கள்.

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net