முத்துக்குமார்!
நீ எரிந்த சேதி கேட்டு
நெஞ்சம் ஏங்கித் தவிக்குதே.
உந்தன் கடைசி நேரக்கடிதம் - எங்கள்
உயிர் சுமக்குதே.

விதியே விதியே
என்செய் நினைத்திட்டாய்
என் தமிழ்ச்சாதியை….

பிஞ்சுப் பூக்கள் உதிரும் போது
உருகி நின்றவா
நெஞ்சக் கூட்டில் தமிழை நன்றாய்
நிறைத்து வைத்தவா

எரிமலையின் குழம்பு தான்
உன் உடலில் ஓடியது.
விடுதலையின் தீயில்
பெரும் தமிழா வேகினாய்

உலக வாய்கள் உதிர்ப்பதெல்லாம்
அழகுப் பொய்யடா – தம்பி
உண்மை சொன்ன உந்தன் மொழியில்
தமிழன் வலியடா

மனிதம் பேசும் வாய்கள்
எல்லாம் மனிதர் இல்லையே
மனிதம் செத்த உலகால் தானே
தினமும் தொல்லையே

சுற்றிச் சுற்றி வருவதெல்லாம்
சோகச் செய்தியே
இரண்டு கண்கள் அழுவதற்கு
போதவில்லையே

எழுக தமிழா சொன்னபோதும் - சில
தமிழன் எழும்பவில்லையே
நீ எரிந்த பின்பும் தூங்கும் தமிழன்
மனிதன் இல்லையே

சின்னச் சின்ன செய்தி கேட்டு
சிலிர்த்துக் கொள்ளும் நாம் - நீ
எரிந்து சொன்ன பின்பு ஏனோ
குமுறி வெடிக்கிறோம்

இறந்த காலக் காயம்
நாளை ஆறும் நண்பனே – உந்தன்
மரணம் தொட்ட கனவு
நிஜமாகும் தமிழனே!






0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net