undefined
undefined
undefined
சூரியத் தீயை
நீர் கொண்டு அணையுங்கள்
வானைச் சுருக்கி
கைகளில் அடக்குங்கள்
புயலைப் பிடித்து
சிறையில் அடையுங்கள்
கடலை அள்ளி
நிலவில் நிறையுங்கள்
சுட்டு விரலில் வைத்து
பூமியைச் சுற்றுங்கள்
இத்தனையும் முடித்த பின்
தமிழனிடம் வாருங்கள்
அவன் விடுதலை நெருப்பை
அணைக்க முயலுங்கள்
அப்போதும் தோற்கும்
உங்களின் அடக்குமுறை
விடுதலை நெருப்பில்
விரல் வைத்து வெந்தவர்களே!
எங்களின் தேசத்தில்
முகமூடி போட்டு
முகம் வைத்தவர்களே!
கேளுங்கள்..
மாவீரர் தேசம்
எதையும் இழக்கும்.
மானத்திற்காக..
மானத் தமிழர்
தங்களையே துறப்பர்.
ஈழத்திற்காக..
காலமும்
களங்களும்
உங்களுக்குப்
பதில் சொல்லும்.
தமிழும்
ஈழமும்
நிச்சயம் வெல்லும்.
ஈழத்தமிழா! தமிழ்நாட்டுத்தமிழனை ஒரு போதும் நம்பாதே. தமிழும் ஈழமும் நிச்சயம் வெல்லும். கருநாடகத்தமிழன்