undefined
undefined
undefined
“கண்களும் களவாடும்”
“இதயங்கள் இடம்மாறித்துடிக்கும்”
சொல்லக் கேட்டதுண்டு.
கேட்டுவிட்டு சத்தமிட்டு
சிரித்ததும் உண்டு.
அப்போது
சிந்தித்தபோது சிந்தனைக்குள்
சிக்கவில்லை.
ஒரு முறைக்கு பலமுறை
பரீட்சித்துப் பார்த்துவிட்டு
சொல்வதெல்லாம்
சுத்தப் பொய் என்று முடிவெடுத்து
பலகாலம் ஆன பின்பு….
ஒரு மழை நாளில்…
ஒரு கணப்பொழுது…
வாழ் நாளை வளம் மாற்றிப் போட்டது.
இது நாள் முடிவை முழுதாய் தகர்த்தது.
புதிதாய் ஒரு முதல் வரி எழுதியது.
சரியான ஒரு சமன்பாடு கண்டது.
அழகான ஒரு முகவரி தந்தது.
அது
அவளும்
அவள் பார்வையும்
அந்தக் கணப்பொழுதுமாய் இருந்தது.
அவள், நான்
நான்கு கண்கள்
ஒரு பார்வை
ஒரே பார்வை
சிறைப்பிடிக்க முடியாமல்
என் பெரிய மூளைக்கு
பைத்தியம் பிடித்தது.
அனுபவித்துத் துடித்தது
அப்பாவி இதயம்
பார்த்துக்கொண்டிருக்க
பட்டப்பகலில்
என்னைக் களவாடின
அந்தக் கண்கள்
ஒரு நொடி நிரந்தரமாய் உறைந்து மீண்டது
இளைய இரத்தம்
சுவாசத்திற்கு
மூச்சுத்திணறியது.
சுதாகரித்து பார்த்தபோது
முழுவதும் நனைந்திருந்தேன்.
மழைத்துளி ஒவ்வொன்றும்
முத்து முத்தாய் சிரித்தது.
அவள்… அவள்
அதோ சென்று கொண்டிருக்கிறாள்
ஏதுமறியாதவள் போல்..
என் இதயம்
அங்கே துடிக்கிறது.
அன்பே ஆருயிரே
அறிவாயா
இல்லை அறிந்தும் அறியாமையால்
என்னைக் கொல்வாயா?
“இதயங்கள் இடம்மாறித்துடிக்கும்”
சொல்லக் கேட்டதுண்டு.
கேட்டுவிட்டு சத்தமிட்டு
சிரித்ததும் உண்டு.
அப்போது
சிந்தித்தபோது சிந்தனைக்குள்
சிக்கவில்லை.
ஒரு முறைக்கு பலமுறை
பரீட்சித்துப் பார்த்துவிட்டு
சொல்வதெல்லாம்
சுத்தப் பொய் என்று முடிவெடுத்து
பலகாலம் ஆன பின்பு….
ஒரு மழை நாளில்…
ஒரு கணப்பொழுது…
வாழ் நாளை வளம் மாற்றிப் போட்டது.
இது நாள் முடிவை முழுதாய் தகர்த்தது.
புதிதாய் ஒரு முதல் வரி எழுதியது.
சரியான ஒரு சமன்பாடு கண்டது.
அழகான ஒரு முகவரி தந்தது.
அது
அவளும்
அவள் பார்வையும்
அந்தக் கணப்பொழுதுமாய் இருந்தது.
அவள், நான்
நான்கு கண்கள்
ஒரு பார்வை
ஒரே பார்வை
சிறைப்பிடிக்க முடியாமல்
என் பெரிய மூளைக்கு
பைத்தியம் பிடித்தது.
அனுபவித்துத் துடித்தது
அப்பாவி இதயம்
பார்த்துக்கொண்டிருக்க
பட்டப்பகலில்
என்னைக் களவாடின
அந்தக் கண்கள்
ஒரு நொடி நிரந்தரமாய் உறைந்து மீண்டது
இளைய இரத்தம்
சுவாசத்திற்கு
மூச்சுத்திணறியது.
சுதாகரித்து பார்த்தபோது
முழுவதும் நனைந்திருந்தேன்.
மழைத்துளி ஒவ்வொன்றும்
முத்து முத்தாய் சிரித்தது.
அவள்… அவள்
அதோ சென்று கொண்டிருக்கிறாள்
ஏதுமறியாதவள் போல்..
என் இதயம்
அங்கே துடிக்கிறது.
அன்பே ஆருயிரே
அறிவாயா
இல்லை அறிந்தும் அறியாமையால்
என்னைக் கொல்வாயா?