ஓரப்பார்வை வீசிப்போகும்
இளந்தென்றலே
என்ன சொல்ல வந்தாய்
என்னிடத்தில்

பூமி பார்த்துப்
புன்னகைத்துப் போறவளே
இந்தக் காளையைப் பார்த்து
காதல் சொல்ல வந்தாயா?

பட்டுத்தாவணி
தொட்டுக் கொள்ளும் பாதங்களே
அவளிற்கு ஒருமுறை
அனுமதி கொடுங்கள்
என்னைப் பார்ப்பதற்கு

யாரும் இல்லாத
பொழுது போகுமுன்னே
சொல்லிவிடு பெண்ணே
சொல்லவந்ததை

இல்லையேல்

என்னைத் தொலைத்தபடி நானும்
உன்னைத் தொலைத்தபடி நீயும்
இந்தப் பொழுதை மீண்டும் தேடி
தொலைக்கவேண்டும்
எம் நந்தவன நாட்களை

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net