நிலவு காயும் நேரம்
என் நெஞ்சுக்குள்ளே ஈரம்.

இரவு தூங்கும் நேரம்
என் இதயம் முழுதும் ஏக்கம்.

இமைகள் மூடா விழிகள்
அழுது வடிக்கும் சோகம்.

இளைய மனதின் நிலையை
வெண்ணிலவே அறிவாள் காண்.

அன்னை மடியின் ஆறுதல்
அவளின் வருகை தருமே!

அவள் அன்பு மொழிப் பேச்சு
எனைத் தூங்க வைக்கும் தாலாட்டு!

அவள் வீசும் ஒளியில்
என் இரவு வெளிச்சம் பெறுமே!

அவள் தூங்கும் பொழுது
என் இரவும் தூங்கி விடுதே!

மீண்டும் பகல் வந்து தொடவே
என் பயணம் நீண்டு தொடர..

இதோ வந்து விட்டார்கள்!
பகல் பொழுதின் பொய் மனிதர்கள்.

கடவுளே!
எப்போது முடியும்
அமைதி கலைக்கும் இந்தப் பகல்கள்?

இப்போதே வராதா?
அந்த வெண்ணிலவின் இரவு

அமைதியாக நான் அழ..
உண்மையுடன் நான் உரையாட..
உறுதியுடன் என் பயணம் தொடர..

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net